No Comments

சர்வ தேச முதியோர் தினம்
இன்று (03-10-2024) சர்வ தேச முதியோர் தினம் நவமங்கை நிவாசத்தினால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விருந்தினர்களா வடமாகாண பிரதான செயலாளர் இ.இளங்கோ,யாழ்/அரச அதிபர் ம.பிரதீபன்,கோப்பாய் பிரதேச செயலர் சிவசிறி, கோப்பாய் ஆசிரியகலாசாலை அதிபர். ச.லலீசன் ஆகியோருடன் கல்விமான்கள், சமுகசேவை அதிகாரிகள் கிராமஅலுவலர்கள், நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.
30 முதியோருக்கு உலர் உணவுபொதிகளும் உடைகளும் வழங்கப்பட்டன.
அத்துடன் மாவட்ட சமுக சேவையாளரிடம் 8ம் திகதி நடைபெறும் முதியோர் தினவிழாவுக்கு அன்பளிப்பு செய்வதற்காக 25 சாறிகளும் வழங்கப்பட்டன.

நவமங்கை நிவாச இயக்குனருக்கு பன்னாட்டு சாதனையாளர் விருது!
நவமங்கை நிவாச இயக்குனர், சமூகசேவகி சுவர்ணா நவரத்தினம் அவர்களுக்கு பன்னாட்டு சிறந்த சாதனையாளர் விருது (18) நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்பட்ட அமைப்பான UNIPON (ஐக்கிய இயற்கை சர்வதேச அமைப்பு) அதன் தேசிய 4வது மாநாடு யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக நடாத்திய நிலையில் இவ் விருது வழங்கப்பட்டது.
அதில் 26 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், அவ் விருதுகளை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்குமார் தலைமை விருந்தினராக ...
No Comments

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பரிசில் வழங்கிவைப்பு
நவமங்கை நிவாசஅறநெறி பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டபோது
No Comments

அறநெறி வகுப்பில் கோலம் போடும் பயிற்சி
19.04.2024 அன்று நடந்த அறநெறி வகுப்பில் கோலம் போடும் பயிற்சி நடைபெற்றது
No Comments

அறநெறி வகுப்பில் கும்பம் வைப்பது தொடர்பில் பயிற்சி
5.4.2024 ல்நடைபெற்ற அறநெறி வகுப்பில் கும்பம் வைப்பது தொடர்பில் பயிற்சி நடைபெற்றது
No Comments

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நிறுவுனருக்கு கௌரவிப்பு
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்ற வேளை எமது நிறுவுனரும் இயக்குனரும் பிரபல சமூக சேவகியும்,வனிதையர் திலகம் “சுவர்ணா நவரத்தினம்” அவர்களையும் கௌரவித்திருந்தனர்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
No Comments

பிரம்மாண்டமான முதியோர் இல்லம் | தனியாய் சாதிக்கும் பெண்!
https://www.youtube.com/watch?v=27lxH6L6iT4
No Comments

அறநெறி பாடசாலை மாணவர்களின் “நீதி கேட்ட நாயகி”எனும் நாடகம்
நல்லூர் ஆதீனத்தில் தெய்வீக திருக்கூட்டம் எனும் நிகழ்ச்சி இந்து சமய கலாச்சாரதிணைக்களத்தினால் இன்று (29-08-2023) நடாத்தப்பட்ட போது நவமங்கை நிவாச அறநெறி பாடசாலை மாணவர்களின் "நீதி கேட்ட நாயகி" எனும் நாடகமும் இடம் பெற்று எல்லோரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.
No Comments

அறநெறிபாடசாலை மாணவர்களுக்கு சத்து உணவு வழங்கிவைப்பு
இன்று (25-08-2023) நவமங்கை நிவாசத்தில் அறநெறிபாடசாலை மாணவர்களுக்கு சத்து உணவுகள் வழங்கப்பட்டது
No Comments

எமது நிறுவுனருக்கு “மங்கையர்க்கு தனியரசி” விருது..!
யாழ்.இந்து சமய பேரவையினால் கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு “மங்கையர்க்கு தனயரசி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமயப் பேரவையினால் நடாத்தப்பட்ட சிவ பூஜா மாநாட்டில் தனி ஒரு பெண்மணியாக சமயத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றிவரும், சேவையை கௌரவிக்கும் முகமாக இந்து சமயப் பேரவையின் தலைவர் சிவா ஸ்ரீ ஈசான சிவ சக்திகிரீவனால் விருது வழங்கியக் கௌரவிக்கப்பட்டது.
No Comments