No Comments

மூன்றாம் கட்ட உதவி வழங்கும் நிகழ்வு
3ம் கட்டமாக நிவாரண பணிகள்இன்று( 16.04.2020) நவமங்கை நிவாசத்தினால் பெண் தலைமைத்துவகுடும்பத்தினருக்கும் விழிப்புணரற்றோர் குடும்பத்திணருக்கும் வறுமை க்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திணருக்கும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

இரண்டாம்கட்ட உதவி வழங்கும் நிகழ்வு
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு நவமங்கை நிவாசத்தினால் இன்றையதினம் இரண்டாம்கட்டமாக உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் முதல்கட்டத்தின் போது பொருட்களை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
இன்றைய தினம் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள் என கிராமசேவகர்களால் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக 125 குடும்பங்களிற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No Comments

உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு
இன்று காலை (27-03-2020) நவமங்கை நிவாசாத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 100 குடும்பத்தினருக்கும் 25 பெண்தலைமைத்துவ குடும்பத்தினருக்கும் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு 4 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No Comments

சான்றிதழ் வழங்கும் வைபவமும் கண்காட்சியும்
2020.02.29 அன்று 14ஆவது பிரிவில் தையல் பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் பயிற்சிமுடிவடைந்து பயிற்சியாளர்களினால் தைக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.
No Comments

கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது.
இன்று 11.02.2020 கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2020 வித்தியாலய அதிபர் திரு. கிருஸ்ணசாமி தர்மஜீலன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றதுயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி திரு சுப்பிரமணியம் பரமானந்தம் பிரதம விருந்தினராக, நவமங்கை நிவாசம் இயக்குநர் செல்வி சுவர்ணா நவரட்ணம் சிறப்பு விருந்தினராக, ,இந்த பாடசாலை ஓய்வு நிலை ஆசிரியர் திருமதி ரஞ்சனா தேவி கருணானந்தன்,கோப்பாய் கிராம அலுவலர் செல்வி குணசீலி தியாகராசா ...
No Comments

லண்டன் சைவ முன்னேற்றச் சங்க ஸ்தாபகர் நிலையத்திற்கு வருகை
லண்டன் சைவ முன்னேற்றச் சங்க ஸ்தாபகரும் அதி உச்ச மனிதநேயமும் சமூக தொண்டருமான திரு. V.R.இராமநாதனனும் (இராமண்ணா) விஜிஅக்காவும் இன்றைய சீரடிபாபா பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.
No Comments

கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு பூந்தோட்டம் அமைத்துக் கொடுத்தல்
எமது நிலையத்தினால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு மிகவும் அழகாகதொரு பூந்தோட்டம் எமது நிலையத்தின் நிதிப்பங்களிப்பில் அமைத்து கொடுக்கப்பட்டது. அதன் திறப்பு விழா இன்றையதினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
No Comments

அரச கரும மொழி ஆணைக்குழுவின் தலைவர் எமது நிலையத்திற்கு வருகைதந்தபோது
07.01.2020 எமது நிலைய ஸ்தாபர் சுவர்ணா நவரட்ணம் அவர்களின் விரிவுரையாளரும், தற்போது அரச கரும மொழி ஆணைக்குழு தலைவருமான பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்கள் எமது நிலையத்திற்கு வருகைதந்திருந்த போது
No Comments

மரம் நடுகை நிகழ்வு
31.10.2019 அன்று நிவாஸம் முன்வீதியில் யாழ்/தேசியகல்விக்கல்லூரி பீடாதிபதி,வீரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோரினால் மரம் நடுகை இடம் பெற்ற போது
No Comments

தீபாவளி அன்று நடைபெற்ற பூஜையும் பஜனையும்.
No Comments