No Comments
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நிறுவுனருக்கு கௌரவிப்பு
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்ற வேளை எமது நிறுவுனரும் இயக்குனரும் பிரபல சமூக சேவகியும்,வனிதையர் திலகம் “சுவர்ணா நவரத்தினம்” அவர்களையும் கௌரவித்திருந்தனர்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அறநெறி பாடசாலை மாணவர்களின் “நீதி கேட்ட நாயகி”எனும் நாடகம்
நல்லூர் ஆதீனத்தில் தெய்வீக திருக்கூட்டம் எனும் நிகழ்ச்சி இந்து சமய கலாச்சாரதிணைக்களத்தினால் இன்று (29-08-2023) நடாத்தப்பட்ட போது நவமங்கை நிவாச அறநெறி பாடசாலை மாணவர்களின் "நீதி கேட்ட நாயகி" எனும் நாடகமும் இடம் பெற்று எல்லோரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.
No Comments
அறநெறிபாடசாலை மாணவர்களுக்கு சத்து உணவு வழங்கிவைப்பு
இன்று (25-08-2023) நவமங்கை நிவாசத்தில் அறநெறிபாடசாலை மாணவர்களுக்கு சத்து உணவுகள் வழங்கப்பட்டது
No Comments
அறநெறிப் பாடசாலை மற்றும் கலை மன்றம் ஆரம்பிப்பு
கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் இன்று 22.01.2023 ஞாயிறு காலை அறநெறிப் பாடசாலை மற்றும் கலை மன்றம் என்பன ஆரம்பிக்கப்பட்டன.
நவமங்கை நிவாச நிறுவுநர் சுவர்ணா நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளர் இ. வரதீஸ்வரன் இந்து சமய பேரவை தலைவர் சக்திகிரீவன் வடக்கு மாகாண முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் தவராஜா யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி சு பரமானந்தம் கோப்பாய் ஆசிரிய கலாசாலை ...
No Comments
பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கல்
இன்று நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள 50 பாடசாலை மாணவர்களுக்கு எமது நிறுவுனர் சுவர்ணா நவரட்ணம் அவர்களினால் சத்துணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழவு 28-10-2022 அன்று எமது நிலையத்தில் நடைபெற்றது.
No Comments
பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு
இன்று (13/10/2022) உலர் உணவுப்பொருட்கள் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு
நவமங்கை நிவாசத்தில் வழங்கிவைக்கப்பட்டது.
No Comments
வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு
நவமங்கை நிவாசத்தில் இன்று (10/10/2022) உலர் உணவு பொருட்கள் வறுமைகோட்டுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது
No Comments
“நவமங்கை நிவாசம்” முதியோர் இல்லம் / NAVAMANKAI NIVASSAM ELDERS HOME
"நவமங்கை நிவாசம் முதியோர் இல்லம்" 2023 ஜனவரியில் தனது சேவைகளை அதிகாரப்பூர்வமாக வழங்குவதற்காக திறக்கப்படுகின்றது.
மிகவும் சுத்தமான உட்புறச் சூழல் மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு வசதிகளுடனும் ,விசேட மற்றும் உயர்தர பராமரிப்பை நாங்கள் வழங்குகிறோம்.
வாரத்தில் ஏழு நாட்கள் வெளியிலிருந்து வருபவர்களின் வருகைக்காக திறந்திருக்கும். எங்கள் கண்கவர் முதியோர் இல்லத்தை நீங்களும் பார்வையிடலாம்.
அனைத்து வசதிகளுடன் 40 சொகுசு அறைகள் உள்ளன.
வருகை தருபவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்
சுவர்ண நவரட்ணம் - 0766431691
பிறேம் - ...
No Comments
சர்வ தேசமுதியோர் தினம்
எதிர்காலத்தில் முதியோர் இல்லங்களை புறந்தள்ள வேண்டும்! இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் தெரிவிப்பு
முதியோர்இல்லங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாதுபுறந்தள்ள வேண்டும் என்ன இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் மாவட்ட கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்
நவ மங்கை நிவாசத்தில் இன்று (01-10-2022) இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
எந்த கஷ்டங்கள்துன்பங்கள் வந்தாலும் நாங்கள் குழந்தைகள் பேரப்பிள்ளைகளுடன் குடும்பத்திலேயே வாழ வேண்டும் ...
No Comments
எமது நிறுவுனர் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்!!
கோப்பாய் நவமங்கை நிவாச இயக்குனரும் பிரபல சமூக சேவகியும்,வனிதையர் திலகம் "சுவர்ணா நவரத்தினம்"
அவர்கள் இன்று (26/05/2022) வடமாகாண உயர் நீதிமன்றில் அகில இலங்கை சமாதான நீதிவானாக, உயர்நீதி மன்ற நீதிபதி திரு.இரா. கண்ணண் அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
No Comments