கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நீர்வேலி கரந்தன் கிராமத்தின் பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 19.04.2019 மாலை இடம்பெற்றது.
இதன்போது கோப்பாய் நவமங்கை நிவாசத்தின் ஸ்தாபகர் திருமதி. சுவர்ணா நவரட்ணம் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டியொன்றும் பிரதேசத்தின் மாணவன் ஒருவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், நவமங்கை நிவாசத்தின் ஸ்தாபகர் திருமதி.சுவர்ணா நவரட்ணம், கரந்தன் கிராம மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.