No Comments
சர்வ தேசமுதியோர் தினம்
எதிர்காலத்தில் முதியோர் இல்லங்களை புறந்தள்ள வேண்டும்! இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் தெரிவிப்பு
முதியோர்இல்லங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாதுபுறந்தள்ள வேண்டும் என்ன இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் மாவட்ட கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்
நவ மங்கை நிவாசத்தில் இன்று (01-10-2022) இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
எந்த கஷ்டங்கள்துன்பங்கள் வந்தாலும் நாங்கள் குழந்தைகள் பேரப்பிள்ளைகளுடன் குடும்பத்திலேயே வாழ வேண்டும் ...
எமது நிறுவுனர் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்!!
கோப்பாய் நவமங்கை நிவாச இயக்குனரும் பிரபல சமூக சேவகியும்,வனிதையர் திலகம் "சுவர்ணா நவரத்தினம்"
அவர்கள் இன்று (26/05/2022) வடமாகாண உயர் நீதிமன்றில் அகில இலங்கை சமாதான நீதிவானாக, உயர்நீதி மன்ற நீதிபதி திரு.இரா. கண்ணண் அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
No Comments
சமாதான நீதவானாக பதவியேற்பு
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் (29-01-2022) நடைபெற்றது. இந் நிகழ்வில் வைத்து எமது நிறுவன நிறுவுனர் சுவர்ணா நவரட்ணம் அவர்கள் சமாதான நீதவானாக நியமனம் பெற்றுள்ளார்
நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளி விவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No Comments
வாழ்வக நிறுவன நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டபோது
சுன்னாகம் வாழ்வகத்தில் நிறுவனர் நினைவு நாளும் பரிசில் வழங்கும் நிகழ்வில் (11/01/2022) எமது நிறுவுனர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டபோது
No Comments
கலைஞர்கள் கௌரவிப்பு
நவமங்கை நிவாசக ஸ்தாபகர் சுவர்ணா நவரட்ணம் அவர்களால் கலைஞர்கள் கௌரவிப்பு
No Comments
எமது ஸ்தாபகர் சுவர்ணா நவரட்ணம் அவர்களுக்கு “வனிதையர் திலகம்” என்ற உயரிய பட்டம் வழங்கப்பட்டது
கல்வியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சாதனைப் பெண் சுவர்ணா நவரட்ணம் (ஸ்தாபகர் நவமங்கை நிவாசம்) அவர்களின் சேவை கௌரவிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா 07.11.2021 அன்று கலாநிதி திருமதி. ஜெ.உதயகுமார் (விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்கல்லூரி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கம்பவாரதி மதிப்பிற்குரிய ஜெயராஜ் ஐயா அவர்கள் சாதனைப் பெண்ணிற்கு வனிதையர் திலகம் என்ற உயரிய பட்டத்தை வழங்கியதோடு நூலினையும் வெளியிட்டு வைத்தார்.
No Comments
கம்பவாரதி ஜெயராஜ் நிவாசத்திற்கு வருகை
அன்புக்கும் மதிப்புக்குரிய கம்பவாரதி ஜெயராஜ் ஐயா அவர்கள் கடந்த சனிக்கிழமை (23-04-2021) நிவாசத்திற்கு வருகை தந்து ஆசீர்வதித்தபோது
No Comments
100 குடும்பத்தினர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது
நவமங்கை நிவாசத்தில் கடந்த சனிக்கிழமை (23.10.2021) வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 100 குடும்பத்தினர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
இதற்கான அனுசரணை பொறியியலாளர் துதிநாதன் சுரேந்தர்.
No Comments
அறநெறிபாடசாலை 60 மாணவர்களுக்கு வங்கியில் பண வைப்பு!!
நவமங்கை நிவாசத்தில் நடைபெறும் அறநெறிபாடசாலை மாணவர்களுக்கு தலா ரூபா 1000-படி 60 மாணவர்களுக்கு வங்கியில் வைப்பு செய்யப்பட்டு இன்று (20.10.2021) வங்கிப்புத்தகம் கையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கான அனுசரனையை கனடாவை சேர்ந்த ஹேமா சிதம்பரநாதன் வழங்கினார்.
No Comments
கோப்பாய் ஆதார வைத்தியசாலையில் நவமங்கை நிவாசத்தின் மகத்தான சேவை
Govid 19 ...2ம் கட்ட தடுப்பூசி கோப்பாய் ஆதார வைத்தியசாலையில் ஏற்றும் போது நவமங்கை நிவாசத்தினால் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்களுக்கு தேனீர் ,சிற்றுண்டி, மதியபோசனம் என்பன வழங்கப்பட்டது அத்துடன் அங்கு வருகை தருபவர்களுக்கு தண்ணீரும் வழங்கப்படுகின்றது. இந்த சேவையானது இன்றிலிருந்து (28.06.2021) தொடர்ந்து 5 நாட்களுக்கு வழங்கப்படும்.
No Comments